விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரியளவில் ஹிட்டான சீரியல் ராஜா ராணி. இந்த தொடரில் நடிகை ஆல்யா மானசா, நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்த இந்த சீரியல் டி ஆர் பியில் முதல் இடத்தை பிடித்தது. அதன் பின் இந்த ரீல் ஜோடிகள் தற்போது ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
அதுமட்டுமின்றி ஆல்யா குழந்தை பெற்ற சில மாதங்களில் உடல் எடையை கு றைத்து போட்டோ ஷூட், டிக்டாக் வீடியோ, நடன வீடியோ போன்ற விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீசனில் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா, நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு ஆலியா, நான் 12 வகுப்பு படித்து முடித்த பின் எத்திராஜ் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் பட்டப்படிப்பினை படிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் சில காரணங்களால் எனது படிப்பை நிறுத்தி விட்டு நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு விசா எம்பசி அ திகாரியாக இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. என்று கூறியுள்ளார்.