விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா. இவர் ஒரு செய்தி வாசிப்பாளர். லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
பின் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம் பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கு புகழ் தேடித் தந்தது பிக்பாஸ் மூலம் இவர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கு விந்தது. இவர் முதன் முதலில் நடித்த படம் 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது. இவர் ‘ப்ளேஸ்ஸோ’ என்ற சோப்பு விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவரிடம் பேட்டி ஒன்றில் ஈழத் தமிழர் பி ரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் எந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
அதற்கு பதிலளித்த லொஸ்லியா இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர் பி ரச்சினை குறித்து எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படத்திலும் அதிக பணம் கொடுத்தாலும் நான் நடிக்க மா ட்டேன் என கூறி விட்டார்.