தமிழ் சினிமாவில் 90-களின் தொடக்கம் முதலே முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் ந டிகை சிம்ரன். விஜய், அஜித் போன்றோருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் ஆஸ்தான ஹீரோயினாக மாறி, இன்று வரையும் பிடித்த ஹீரோயினாகவே தன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட ஒரு சில ந டிகைகளில் சிம்ரனுக்கு எப்போதுமே ஒருஇடமுண்டு.
கடந்த 2003-ம் ஆண்டு திருமணமாகி சினிமாவில் இருந்து வி லகியிருந்த சிம்ரன் 2019-ம் ஆண்டு தலைவர் ரஜினிகாந்துடன் “பே ட் ட” படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் மறுபடியும் ரீ எ ன் ட் ரி அளித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து “சீ ம ரா ஜா”, “து ப்பறிவாளன்” போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இப்பொழுதும் பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் “வாரணம் ஆயிரம்” படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக சிம்ரன் நடித்திருந்ததை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதாவது சூர்யாவிற்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள், தளபதி விஜயிற்கு அம்மாவாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, நிச்சயம் நடிக்க மாட்டேன் அதை விஜய்யின் ரசிகர்களே விரும்ப மாட்டார்கள் என கூறியிருந்தார்.