13 வருடங்கள் கழித்து பிறந்த தன்னுடைய இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை…!!

சினிமா

பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான “தேவர் மகன்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு பாண்டவர் பூமி, தி மிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற ஏராளமான திரைப்படங்களில்  நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதை நிர்வகித்தும் வருகிறார்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்த வரை நீலிமா ராணிக்கும் அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம்.  இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார்.

தனது கர் ப்ப கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். மேலும் இந்நிலையில் இவருக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பெற்றெடுத்தார் . அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் அது மட்டுமல்லாமல் இந்த குழந்தையை பார்த்த இவரின் ரசிகர்கள் அம்மாவின் ஜாடையில் இருகின்றது என்று கமெண்ட் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *