திரையுலகில் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை அம்பிகா.1978 முதல் 1989 வரை தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
மேலும் அவரது தங்கை ராதா ஒரு நடிகை. நடிகை அம்பிகா திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லரா என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு தங்கைகள், ராதா மற்றும் மல்லிகா, மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், அர்ஜுன் மற்றும் சுரேஷ் உள்ளனர்.
மேலும் நடிகை அம்பிகா தனது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமணம் செய்ய முடிவு செய்து ஆர்.ஐ. பிரேம்குமார் மேனன் என்ற நபரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து முடித்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இருப்பினும் அவர்கள் 1996 இல் வி வாகரத்து பெற்றனர். பின் அவர் 2000 ம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை மணந்தார்.
அவர் தற்போது தனது மகன்களுடன் சென்னையில் குடியேறினார். தற்போது தமிழ் நடிகைகள் பலருமே ஒரு திருமணம் செய்து வந்ததாக சரித்திரமே இ ல்லாமல் செய்து விட்டார்கள். நடிகை அம்பிகா இப்போது இதில் ராமகேஷவ் கலாசல் எனும் படத்தில் நடிக்கிறார்.
மேலும் கலாசல் படத்தை அஸ்வின் மாதவ் இயக்குகிறார். இவர் சுந்தர் சி யிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாம்.